நெஞ்சொடு கிளத்தல்
 
1241. நினைத்து ஒன்று சொல்லாயோ-நெஞ்சே!-எனைத்து ஒன்றும்
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து?.

1241

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1242. காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை-வாழி, என் நெஞ்சு!.

1242

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1243. இருந்து உள்ளி, என் பரிதல்?-நெஞ்சே!-பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்கண் இல்.

1243

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1244. கண்ணும் கொளச் சேறி-நெஞ்சே!-இவை என்னைத்
தின்னும், அவர்க் காணல் உற்று!.

1244

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1245. செற்றார் எனக் கைவிடல் உண்டோ-நெஞ்சே!-யாம்
உற்றால் உறாஅதவர்?.

1245

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1246. கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால், புலந்து உணராய்;
பொய்க் காய்வு காய்தி-என் நெஞ்சு.

1246

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1247. காமம் விடு, ஒன்றோ; நாண் விடு-நல் நெஞ்சே!-
யானோ பொறேன், இவ் இரண்டு.

1247

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1248. பரிந்து அவர் நல்கார் என்று, ஏங்கி, பிரிந்தவர்-
பின் செல்வாய்; பேதை-என் நெஞ்சு.!

1248

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1249. உள்ளத்தார் காதலவர் ஆக, உள்ளி நீ
யாருழைச் சேறி?- என் நெஞ்சு!.

1249

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா,
இன்னும் இழத்தும், கவின்.

1250

பதிவிறக்கம் செய்ய
உரை