தொடக்கம் | ||
நெஞ்சொடு கிளத்தல்
|
||
1241. | நினைத்து ஒன்று சொல்லாயோ-நெஞ்சே!-எனைத்து ஒன்றும் எவ்வ நோய் தீர்க்கும் மருந்து?. |
1241 பதிவிறக்கம் செய்யஉரை |
1242. | காதல் அவர் இலர் ஆக நீ நோவது பேதைமை-வாழி, என் நெஞ்சு!. |
1242 பதிவிறக்கம் செய்யஉரை |
1243. | இருந்து உள்ளி, என் பரிதல்?-நெஞ்சே!-பரிந்து உள்ளல் பைதல் நோய் செய்தார்கண் இல். |
1243 பதிவிறக்கம் செய்யஉரை |
1244. | கண்ணும் கொளச் சேறி-நெஞ்சே!-இவை என்னைத் தின்னும், அவர்க் காணல் உற்று!. |
1244 பதிவிறக்கம் செய்யஉரை |
1245. | செற்றார் எனக் கைவிடல் உண்டோ-நெஞ்சே!-யாம் உற்றால் உறாஅதவர்?. |
1245 பதிவிறக்கம் செய்யஉரை |
1246. | கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால், புலந்து உணராய்; பொய்க் காய்வு காய்தி-என் நெஞ்சு. |
1246 பதிவிறக்கம் செய்யஉரை |
1247. | காமம் விடு, ஒன்றோ; நாண் விடு-நல் நெஞ்சே!- யானோ பொறேன், இவ் இரண்டு. |
1247 பதிவிறக்கம் செய்யஉரை |
1248. | பரிந்து அவர் நல்கார் என்று, ஏங்கி, பிரிந்தவர்- பின் செல்வாய்; பேதை-என் நெஞ்சு.! |
1248 பதிவிறக்கம் செய்யஉரை |
1249. | உள்ளத்தார் காதலவர் ஆக, உள்ளி நீ யாருழைச் சேறி?- என் நெஞ்சு!. |
1249 பதிவிறக்கம் செய்யஉரை |
1250. | துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா, இன்னும் இழத்தும், கவின். |
1250 பதிவிறக்கம் செய்யஉரை |