தொடக்கம் | ||
நிறை அழிதல்
|
||
1251. | காமக் கணிச்சி உடைக்கும்-நிறை என்னும் நாணுத் தாழ் வீழ்த்த கதவு. |
1251 பதிவிறக்கம் செய்யஉரை |
1252. | காமம் என ஒன்றோ கண் இன்று! என் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும், தொழில். |
1252 பதிவிறக்கம் செய்யஉரை |
1253. | மறைப்பேன்மன் காமத்தை யானோ; குறிப்பு இன்றித் தும்மல்போல் தோன்றிவிடும். |
1253 பதிவிறக்கம் செய்யஉரை |
1254. | நிறை உடையேன் என்பேன்மன், யானோ; என் காமம், மறை இறந்து, மன்றுபடும். |
1254 பதிவிறக்கம் செய்யஉரை |
1255. | செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை, காம நோய் உற்றார் அறிவது ஒன்று அன்று. |
1255 பதிவிறக்கம் செய்யஉரை |
1256. | செற்றவர்பின் சேறல் வேண்டி,-அளித்துஅரோ!- எற்று, என்னை உற்ற துயர்?. |
1256 பதிவிறக்கம் செய்யஉரை |
1257. | நாண் என ஒன்றோ அறியலம்-காமத்தான், பேணியார் பெட்ப செயின். |
1257 பதிவிறக்கம் செய்யஉரை |
1258. | பல மாயக் கள்வன் பணிமொழி அன்றோ-நம் பெண்மை உடைக்கும் படை!. |
1258 பதிவிறக்கம் செய்யஉரை |
1259. | 'புலப்பல்' எனச் சென்றேன்; புல்லினேன், நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. |
1259 பதிவிறக்கம் செய்யஉரை |
1260. | நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ- புணர்ந்து ஊடி நிற்பேம் எனல்?. |
1260 பதிவிறக்கம் செய்யஉரை |