தொடக்கம் | ||
அவர்வயின் விதும்பல்
|
||
1261. | வாள் அற்றுப் புற்கென்ற, கண்ணும்; அவர் சென்ற நாள் ஒற்றித் தேய்ந்த, விரல். |
1261 பதிவிறக்கம் செய்யஉரை |
1262. | இலங்கிழாய்! இன்று மறப்பின், என் தோள்மேல் கலம் கழியும், காரிகை நீத்து. |
1262 பதிவிறக்கம் செய்யஉரை |
1263. | உரன் நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார் வரல் நசைஇ, இன்னும் உளேன். |
1263 பதிவிறக்கம் செய்யஉரை |
1264. | கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி, கோடு கொடு ஏறும், என் நெஞ்சு. |
1264 பதிவிறக்கம் செய்யஉரை |
1265. | காண்கமன், கொண்கனைக் கண் ஆர; கண்டபின், நீங்கும், என் மென் தோட் பசப்பு. |
1265 பதிவிறக்கம் செய்யஉரை |
1266. | வருகமன், கொண்கன் ஒருநாள்; பருகுவன், பைதல்நோய் எல்லாம் கெட. |
1266 பதிவிறக்கம் செய்யஉரை |
1267. | புலப்பேன்கொல்-புல்லுவேன் கொல்லோ-கலப்பேன்கொல்- கண் அன்ன கேளிர் வரின்?. |
1267 பதிவிறக்கம் செய்யஉரை |
1268. | வினை கலந்து வென்றீக, வேந்தன்! மனை கலந்து மாலை அயர்கம், விருந்து!. |
1268 பதிவிறக்கம் செய்யஉரை |
1269. | ஒரு நாள் எழு நாள்போல் செல்லும்-சேண் சென்றார் வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு. |
1269 பதிவிறக்கம் செய்யஉரை |
1270. | பெறின் என் ஆம்-பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம்- உள்ளம் உடைந்து உக்கக்கால்?. |
1270 பதிவிறக்கம் செய்யஉரை |