தொடக்கம் | ||
குறிப்பு அறிவுறுத்தல்
|
||
1271. | கரப்பினும், கையிகந்து ஒல்லா, நின் உண்கண் உரைக்கல் உறுவது ஒன்று உண்டு. |
1271 பதிவிறக்கம் செய்யஉரை |
1272. | கண் நிறைந்த காரிகை, காம்பு ஏர் தோள், பேதைக்குப் பெண் நிறைந்த நீர்மை பெரிது. |
1272 பதிவிறக்கம் செய்யஉரை |
1273. | மணியுள் திகழ்தரும் நூல்போல், மடந்தை அணியுள் திகழ்வது ஒன்று உண்டு. |
1273 பதிவிறக்கம் செய்யஉரை |
1274. | முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல், பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு. |
1274 பதிவிறக்கம் செய்யஉரை |
1275. | செறிதொடி செய்து இறந்த கள்ளம், உறு துயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து. |
1275 பதிவிறக்கம் செய்யஉரை |
1276. | பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல், அரிது ஆற்றி, அன்பு இன்மை சூழ்வது உடைத்து. |
1276 பதிவிறக்கம் செய்யஉரை |
1277. | தண்ணந் துறைவன் தணந்தமை, நம்மினும் முன்னம் உணர்ந்த, வளை. |
1277 பதிவிறக்கம் செய்யஉரை |
1278. | நெருநற்றுச் சென்றார் எம் காதலர்; யாமும் எழு நாளேம், மேனி பசந்து. |
1278 பதிவிறக்கம் செய்யஉரை |
1279. | தொடி நோக்கி, மென் தோளும் நோக்கி, அடி நோக்கி, அஃது, ஆண்டு அவள் செய்தது. |
1279 பதிவிறக்கம் செய்யஉரை |
1280. | பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப-கண்ணினான் காம நோய் சொல்லி இரவு. |
1280 பதிவிறக்கம் செய்யஉரை |