தொடக்கம் | ||
புணர்ச்சி விதும்பல்
|
||
1281. | உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும், கள்ளுக்கு இல்; காமத்திற்கு உண்டு. |
1281 பதிவிறக்கம் செய்யஉரை |
1282. | தினைத் துணையும் ஊடாமை வேண்டும்-பனைத் துணையும் காமம் நிறைய வரின். |
1282 பதிவிறக்கம் செய்யஉரை |
1283. | பேணாது பெட்பவே செய்யினும், கொண்கனைக் காணாது அமையல, கண். |
1283 பதிவிறக்கம் செய்யஉரை |
1284. | ஊடற்கண் சென்றேன்மன்;-தோழி! அது மறந்து கூடற்கண் சென்றது, என் நெஞ்சு. |
1284 பதிவிறக்கம் செய்யஉரை |
1285. | எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல், கொண்கன் பழி காணேன், கண்ட இடத்து. |
1285 பதிவிறக்கம் செய்யஉரை |
1286. | காணுங்கால் காணேன் தவறு ஆய; காணாக்கால், காணேன், தவறு அல்லவை. |
1286 பதிவிறக்கம் செய்யஉரை |
1287. | உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரேபோல், பொய்த்தல் அறிந்து, என் புலந்து?. |
1287 பதிவிறக்கம் செய்யஉரை |
1288. | இளித்தக்க இன்னா செயினும், களித்தார்க்குக் கள் அற்றே-கள்வ!- நின் மார்பு. |
1288 பதிவிறக்கம் செய்யஉரை |
1289. | மலரினும் மெல்லிது காமம்; சிலர், அதன் செவ்வி தலைப்படுவார். |
1289 பதிவிறக்கம் செய்யஉரை |
1290. | கண்ணின் துனித்தே, கலங்கினாள், புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்று. |
1290 பதிவிறக்கம் செய்யஉரை |