தொடக்கம் | ||
நெஞ்சொடு புலத்தல்
|
||
1291. | அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும், எவன்,-நெஞ்சே!- நீ எமக்கு ஆகாதது?. |
1291 பதிவிறக்கம் செய்யஉரை |
1292. | உறாஅதவர்க் கண்ட கண்ணும், அவரைச் செறாஅர் எனச் சேறி-என் நெஞ்சு. |
1292 பதிவிறக்கம் செய்யஉரை |
1293. | 'கெட்டார்க்கு நட்டார் இல்' என்பதோ-நெஞ்சே!-நீ பெட்டாங்கு அவர்பின் செலல்?. |
1293 பதிவிறக்கம் செய்யஉரை |
1294. | இனி, அன்ன நின்னொடு சூழ்வார் யார்-நெஞ்சே! துனி செய்து துவ்வாய்காண் மற்று?. |
1294 பதிவிறக்கம் செய்யஉரை |
1295. | பெறாஅமை அஞ்சும்; பெறின், பிரிவு அஞ்சும்; அறாஅ இடும்பைத்து-என் நெஞ்சு. |
1295 பதிவிறக்கம் செய்யஉரை |
1296. | தனியே இருந்து நினைத்தக்கால், என்னைத் தினிய இருந்தது-என் நெஞ்சு. |
1296 பதிவிறக்கம் செய்யஉரை |
1297. | நாணும் மறந்தேன்-அவர் மறக்கல்லா என் மாணா மட நெஞ்சின் பட்டு. |
1297 பதிவிறக்கம் செய்யஉரை |
1298. | 'எள்ளின், இளிவாம்' என்று எண்ணி, அவர் திறம் உள்ளும்-உயிர்க் காதல் நெஞ்சு. |
1298 பதிவிறக்கம் செய்யஉரை |
1299. | துன்பத்திற்கு யாரே துணை ஆவார்-தாம் உடைய நெஞ்சம் துணை அல்வழி?. |
1299 பதிவிறக்கம் செய்யஉரை |
1300. | தஞ்சம், தமர் அல்லர் ஏதிலார்-தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி. |
1300 பதிவிறக்கம் செய்யஉரை |