நெஞ்சொடு புலத்தல்
 
1291. அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும், எவன்,-நெஞ்சே!-
நீ எமக்கு ஆகாதது?.

1291

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1292. உறாஅதவர்க் கண்ட கண்ணும், அவரைச்
செறாஅர் எனச் சேறி-என் நெஞ்சு.

1292

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1293. 'கெட்டார்க்கு நட்டார் இல்' என்பதோ-நெஞ்சே!-நீ
பெட்டாங்கு அவர்பின் செலல்?.

1293

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1294. இனி, அன்ன நின்னொடு சூழ்வார் யார்-நெஞ்சே!
துனி செய்து துவ்வாய்காண் மற்று?.

1294

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1295. பெறாஅமை அஞ்சும்; பெறின், பிரிவு அஞ்சும்;
அறாஅ இடும்பைத்து-என் நெஞ்சு.

1295

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1296. தனியே இருந்து நினைத்தக்கால், என்னைத்
தினிய இருந்தது-என் நெஞ்சு.

1296

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1297. நாணும் மறந்தேன்-அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு.

1297

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1298. 'எள்ளின், இளிவாம்' என்று எண்ணி, அவர் திறம்
உள்ளும்-உயிர்க் காதல் நெஞ்சு.

1298

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1299. துன்பத்திற்கு யாரே துணை ஆவார்-தாம் உடைய
நெஞ்சம் துணை அல்வழி?.

1299

பதிவிறக்கம் செய்ய
உரை
 
1300. தஞ்சம், தமர் அல்லர் ஏதிலார்-தாம் உடைய
நெஞ்சம் தமர் அல்வழி.

1300

பதிவிறக்கம் செய்ய
உரை