தொடக்கம் | ||
புலவி
|
||
1301. | புல்லாது இராஅப் புலத்தை; அவர் உறும் அல்லல் நோய் காண்கம், சிறிது. |
1301 பதிவிறக்கம் செய்யஉரை |
1302. | உப்பு அமைந்தற்றால், புலவி; அது சிறிது மிக்கற்றால், நீள விடல். |
1302 பதிவிறக்கம் செய்யஉரை |
1303. | அலந்தாரை அல்லல் நோய் செய்தற்றால்-தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். |
1303 பதிவிறக்கம் செய்யஉரை |
1304. | ஊடியவரை உணராமை-வாடிய வள்ளி முதல் அரிந்தற்று. |
1304 பதிவிறக்கம் செய்யஉரை |
1305. | நலத்தகை நல்லவர்க்கு ஏஎர், புலத் தகை, பூ அன்ன கண்ணார் அகத்து. |
1305 பதிவிறக்கம் செய்யஉரை |
1306. | துனியும் புலவியும் இல்லாயின், காமம் கனியும் கருக்காயும் அற்று. |
1306 பதிவிறக்கம் செய்யஉரை |
1307. | ஊடலின் உண்டு ஆங்கு ஓர் துன்பம்-'புணர்வது நீடுவது அன்றுகொல்!' என்று. |
1307 பதிவிறக்கம் செய்யஉரை |
1308. | நோதல் எவன், மற்று-'நொந்தார்' என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி. |
1308 பதிவிறக்கம் செய்யஉரை |
1309. | நீரும் நிழலது இனிதே; புலவியும் வீழுநர்கண்ணே இனிது. |
1309 பதிவிறக்கம் செய்யஉரை |
1310. | ஊடல் உணங்க, விடுவாரொடு, என் நெஞ்சம், ‘கூடுவேம்’ என்பது அவா. |
1310 பதிவிறக்கம் செய்யஉரை |