தொடக்கம் | ||
புலவி நுணுக்கம்
|
||
1311. | பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்; நண்ணேன்-பரத்த!-நின் மார்பு. |
1311 பதிவிறக்கம் செய்யஉரை |
1312. | ஊடி இருந்தேமா, தும்மினார்-யாம் தம்மை, ‘நீடு வாழ்க!’ என்பாக்கு அறிந்து. |
1312 பதிவிறக்கம் செய்யஉரை |
1313. | கோட்டுப் பூச் சூடினும் காயும்-'ஒருத்தியைக் காட்டிய சூடினீர்!' என்று. |
1313 பதிவிறக்கம் செய்யஉரை |
1314. | 'யாரினும் காதலம்' என்றேனா, ஊடினாள்- ‘யாரினும்! யாரினும்!’ என்று. |
1314 பதிவிறக்கம் செய்யஉரை |
1315. | 'இம்மைப் பிறப்பில் பிரியலம்' என்றேனா, கண் நிறை நீர் கொண்டனள். |
1315 பதிவிறக்கம் செய்யஉரை |
1316. | 'உள்ளினேன்' என்றேன்; ‘மற்று என் மறந்தீர்’ என்று என்னைப் புல்லாள், புலத்தக்கனள். |
1316 பதிவிறக்கம் செய்யஉரை |
1317. | வழுத்தினாள், தும்மினேனாக; அழித்து அழுதாள், ‘யார் உள்ளித் தும்மினீர்?’ என்று. |
1317 பதிவிறக்கம் செய்யஉரை |
1318. | தும்முச் செறுப்ப, அழுதாள், ‘நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ?’ என்று. |
1318 பதிவிறக்கம் செய்யஉரை |
1319. | தன்னை உணர்த்தினும் காயும், ‘பிறர்க்கும் நீர் இந் நீரர் ஆகுதிர்!’ என்று. |
1319 பதிவிறக்கம் செய்யஉரை |
1320. | நினைத்திருந்து நோக்கினும், காயும், ‘அனைத்தும் நீர் யார் உள்ளி நோக்கினீர்?’ என்று. |
1320 பதிவிறக்கம் செய்யஉரை |