இனியவை கூறல்
100இனிய வுளவாக லின்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிமையான    சொற்கள்    இருக்கும்போது   அவற்றை   விடுத்துக்
கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக்   காய்களைப்   பறித்துத்
தின்பதற்குச் சமமாகும்.