செய்ந்நன்றி அறிதல்
101செய்யாதார் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.

"வாராது  வந்த  மாமணி"  என்பதுபோல்,  "செய்யாமற் செய்த உதவி"
என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த  வானமும்
பூமியும் கூட ஈடாக மாட்டா.