குடிசெயல்வகை
1021கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும்
பெருமையிற் பீடுடைய தில்.

உரிய  கடமையைச்   செய்வதில்  சோர்வு  காணாமல்  எவனொருவன்
முயற்சிகளை  விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக
வேறொரு பெருமை கிடையாது.