உழவு
1038ஏரினும் நன்றா மெருவிடுதல் கட்டபின்
நீரினு நன்றதன் காப்பு.

உழுவதைக்  காட்டிலும்  உரம்  இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர்
பாய்ச்சுவதும்  மிகவும்  நல்லது;  அதைவிட  நல்லது   அந்தப்  பயிரைப்
பாதுகாப்பது.