செய்ந்நன்றி அறிதல்
104தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்.

ஒருவர்  செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும்
நன்றியுள்ளவர்  பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக்
கருதுவார்.