குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நல்குரவு
1047
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை,
அவன் தாய்கூட அயலானைப் போலதான் கருதுவாள்.