கயமை
1074அகப்பட்டி யாவாரைக் காணி னவரின்
மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்.

பண்பாடு  இல்லாத   கயவர்கள்,   தம்மைக்   காட்டிலும்   இழிவான
குணமுடையோரைக்  கண்டால்,  அவர்களை  விடத்  தாம்  சிறந்தவர்கள்
என்று கர்வம் கொள்வார்கள்.