தகையணங்குறுத்தல்
1083பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

கூற்றுவன்  எனப்படும்  பொல்லாத  எமனை,  எனக்கு  முன்பெல்லாம்
தெரியாது;  இப்போது  தெரிந்து  கொண்டேன்.  அந்த  எமன்  என்பவன்
பெண்ணுருவத்தில்   வந்து    போர்   தொடுக்கக்கூடிய   விழியம்புகளை
உடையவன் என்ற உண்மையை.