தகையணங்குறுத்தல்
1085கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
னோக்கமிம் மூன்றும் முடைத்து.

உயிர்பறிக்கும்  கூற்றமோ?  உறவாடும்  விழியோ?  மருட்சிகொள்ளும்
பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த  மூன்று கேள்விகளையும்
எழுப்புகிறதே.