செய்ந்நன்றி அறிதல்
109கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்.

ஒருவர்  செய்யும்  மிகக்  கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப்
புண்படுத்தாமல்   அகன்றுவிட   வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர்
நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.