காதற் சிறப்புரைத்தல்
1121பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.

இனியமொழி  பேசுகின்ற  இவளுடைய  வெண்முத்துப்  பற்களிடையே
சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.