காதற் சிறப்புரைத்தல்
1122உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு.

உயிரும்    உடலும்    ஒன்றையொன்று    பிரிந்து    தனித்தனியாக
இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.