காதற் சிறப்புரைத்தல்
1124வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து.

ஆய்ந்து   தேர்ந்த  அரிய  பண்புகளையே  அணிகலனாய்ப்  பூண்ட
ஆயிழை  என்னோடு  கூடும்போது,  உயிர் உடலோடு கூடுவது போலவும்,
அவள்  என்னைவிட்டு  நீங்கும்போது  என்னுயிர்   நீங்குவது  போலவும்
உணருகிறேன்.