அலரறிவுறுத்தல்
1146கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
திங்களைப் பாம்புகொண் டற்று.

காதலர்  சந்தித்துக் கொண்டது  ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப்
பாம்பு  விழுங்குவதாகக்  கற்பனையாகக்   கூறப்படும் "கிரகணம்"  எனும்
நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர்முழுவதும் அலராகப் பரவியது.