அலரறிவுறுத்தல்
1147ஊரவர் கௌவை யெருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.

ஒருவரையொருவர்  விரும்பி  மலர்ந்த  காதலானது ஊர்மக்கள் பேசும்
பழிச்சொற்களை  எருவாகவும்  அன்னையின்  கடுஞ்சொற்களை  நீராகவும்
கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது.