படர்மெலிந்திரங்கல்
1161மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

இறைக்க  இறைக்கப்  பெருகும்  ஊற்றுநீர்  போல,  பிறர்  அறியாமல்
மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.