கண்விதுப்பழிதல்
1177உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண்.

அன்று,  இழைந்து  குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே!
இன்று  பிரிந்து  சென்றுள்ள  அவரை  நினைத்துத்  தூங்காமலும்,  துளிக்
கண்ணீரும் அற்றுப் போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.