பொழுதுகண்டிரங்கல்
1225காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக   வருத்துகிறது.
அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் "காலை நேரத்துக்கு நான் செய்த
நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த  தீமைதான்   என்ன?" என்று
புலம்புகிறது.