நெஞ்சொடு கிளத்தல்
1249உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு.

உள்ளத்திலேயே   காதலர்  குடி  கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ
அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?