அவர்வயின் விதும்பல்
1262இலங்கிழா யின்று மறப்பினென் மென்றோள்
கலங்கழியுங் காரிகை நீத்து.

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை
மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு  நீங்கி  மெலிந்து போய்
வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.