குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அவர்வயின் விதும்பல்
1265
காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்றோட் பசப்பு.
கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய
தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.