அவர்வயின் விதும்பல்
1267புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்.

கண்ணின் மணியாம் எனன் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த   துயரின்
காரணமாக அவருடன் ஊடல் கொள்வேனோ? அல்லது    கட்டித் தழுவிக்
கொள்வேனோ? அல்லது ஊடுதல்    கூடுதல்    ஆகிய    இரண்டையும்
இணைத்துச்    செய்வேனோ?   ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த
இன்பத்தை நினைக்கும்போது.