புணர்ச்சிவிதும்பல்
1285எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.

கண்ணில்   மை  தீட்டித்   கொள்ளும்  பொழுது அந்த மை தீட்டும்,
கோலைக்    காணாதது    போலவே, காதலனைக் காணும்பொழுது அவன்
என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.