நெஞ்சொடுபுலத்தல்
1294இனியன்ன நின்னோடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன்   பயனைக்    கூடலில்
நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார்
பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.