புலவிநுணுக்கம்
1312ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்ப தறிந்து.

ஊடல்   கொண்டிருந்தபோது   அவர்   தும்மினார்; ஊடலை விடுத்து
அவரை "நீடுவாழ்க" என வாழ்த்துவேன் என்று நினைத்து.