குறள் முதற்குறிப்பு அகரவரிசை
புலவிநுணுக்கம்
1312
ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்ப தறிந்து.
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து
அவரை "நீடுவாழ்க" என வாழ்த்துவேன் என்று நினைத்து.