புலவிநுணுக்கம்
1314யாரினுங் காதல மென்றேனா வூடினாள்
யாரினும் யாரினு மென்று.

"யாரைக்    காட்டிலும்     உன்னிடம்    நான்   காதல் மிகுதியாகக்
கொண்டுள்ளேன்" என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி  தவறாக
எடுத்துக்கொண்டு  "யாரைக்காட்டிலும்  யாரைக்  காட்டிலும்"  எனக்கேட்டு
ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.