புலவிநுணுக்கம்
1315இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.

"இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்"  என்று   நான்   சொன்னவுடன்
"அப்படியானால் மறு   பிறப்பு    என   ஒன்று   உண்டோ? அப்போது
நம்மிடையே    பிரிவு     ஏற்படுமெனக்   கூறுகிறாயா?" எனக் கேட்டுக்
கண்கலங்கினாள் காதலி.