புலவிநுணுக்கம்
1317வழுத்தினாள் தும்மினே மாக வழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீ ரென்று.

தும்மினேன்; வழக்கப்படி அவள்   என்னை   வாழ்த்தினாள்.  உடனே
என்ன சந்தேகமோ "யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்" என்று கேட்டு,
முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்.