ஊடலுவகை
1330ஊடுதல் காமத்திற் கின்பம் மதற்கின்பங்
கூடி முயங்கப் பெறின்.

ஒருவருக்கொருவர்    செல்லமாகச்    சினங்கொண்டு   பிரிந்திருப்பது
எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப்
பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.