குறள் முதற்குறிப்பு அகரவரிசை
ஒழுக்கமுடைமை
139
ஒழுக்க முடையவர்க் கொல்லாதே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம்
உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.