அழுக்காறாமை
163அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

அறநெறியையும், ஆக்கத்தையும்  விரும்பிப்  போற்றாதவன்தான்,  பிறர்
பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.