அழுக்காறாமை
167அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ
டவ்வையைக் காட்டி விடும்.

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி
என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு
அடையாளம் காட்டிவிட்டுத்  தங்கை  இலக்குமி  அவனைவிட்டு  அகன்று
விடுவாள்.