வெஃகாமை
171நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமு மாங்கே தரும்

மனச்சான்றை   ஒதுக்கிவிட்டுப்    பிறர்க்குரிய    அரும் பொருளைக்
கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும்   வந்து
சேரும்.