வான் சிறப்பு.
19தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

இப்பேருலகில்  மழை   பொய்த்துவிடுமானால்  அது, பிறர் பொருட்டுச்
செய்யும்   தானத்திற்கும்,  தன்பொருட்டு   மேற்கொள்ளும்  நோன்புக்கும்
தடங்கலாகும்.