தீவினையச்சம்
204மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி
னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

மறந்தும்கூட  மற்றவர்க்குக்  கேடு  செய்ய நினைக்கக் கூடாது; அப்படி
நினைத்தால்  அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு
விடும்.