ஒப்புரவறிதல்
217மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.

பிறருக்கு  உதவிடும்   பெருந்தன்மையாம்  ஒப்புரவு   உடையவனிடம்,
செல்வம்    சேர்ந்தால்   அது  ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும்
மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.