ஈகை
222நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று.

பிறரிடமிருந்து    நல்வழியில்    பொருளைப்    பெற்றாலும்    அது
பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை  வழங்குவதால்    மேலுலகம்
என்று  சொல்லப்படுவது    கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக்
கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.