ஈகை
226அற்றார் ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண்  போகாது.
அதுவே, தான் தேடிய பொருளைப்  பிற்காலத்தில்   உதவுவதற்கு  ஏற்பச்
சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.