ஈகை
228ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

ஏழை எளியோர்க்கு    எதுவும்   அளித்திடாமல்   ஈட்டிய  பொருள்
அனைத்தையும் இழந்திடும்   ஈவு   இரக்கமற்றோர்,   பிறர்க்கு   வழங்கி
மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?