அருளுடைமை
249தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேறி
னருளாதான் செய்யு மறம்.

அறிவுத்   தெளிவு   இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக்
கண்டறிய   முடியுமா?   அது  போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும்
அறச்செயலும் இருக்கும்.