தவம்
266தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையிற் பட்டு.

அடக்கமும்,  அன்பு  நெறியும்,  துன்பங்களைத் தாங்கும் பொறுமையும்
வாய்ந்த   தவம்  மேற்கொண்டவர்கள்   மட்டுமே   தமது   கடமையைச்
செய்பவர்கள்; அதற்கு  மாறானவர்கள்,  ஆசையால்  அலைக்கழிக்கப்பட்டு
வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்.