கூடாவொழுக்கம்
271வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும்.

ஒழுக்க   சீலரைப்  போல்  உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து
அவரது உடலில் கலந்துள்ள  நிலம்,  நீர்,  தீ,  காற்று, வெளி  எனப்படும்
பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.